Tuesday, November 29, 2016

விரைவில் தமிழீழம் மலரும்

தமிழீழ மண்ணுக்காய்
வீழ்ந்த விழுந்த
விதைகளின் தியாகம்
வீண் போகவில்லை!!!



தடைக ளிருந்தாலும்
மறவோம்
எம்மாவீரரை பூஜிக்க

மாவீரர்களின்
கல்லறை நிலத்தை
தூய்மையாக்கினோம் இன்று
விரைவில்
தமிழீழத்தில்
களைகள் அகற்றுவோம்!!!!!















அடக்கு முறைகளும்
சர்வாதிகாரமும்
துப்பாக்கி முனைகளும்
அடக்கிடாது எங்களின்
உணர்வுகளை
என்று உலகிற்கு
மீண்டும் ஒருமுறை
நிரூபித்த்திட்ட
எம்ஈழ உறவுகளின்
பாதந் தொட்டு வணங்குகின்றேன்
தமிழனாக

                      
தமிழீழ மண்ணில்
மக்கள் மட்டுமல்ல
இயற்கையும்
எம் மாவீரர்களுக்கு
கண்ணீர் சிந்தியது!!
                                   

விழுந்தவர்கள்
எழும் நேரம் இனி
விதையாகியவர்கள்
விருட்சமாக மாறிடும் நேரம் இனி!!!!

No comments:

Post a Comment