Wednesday, November 23, 2016

பழைய பட குத்தாட்டம் : சித்தாடை கட்டிக்கிட்டு


படம் : வண்ணக்கிளி
வெளிவந்த ஆண்டு : 1959
பாடல் எழுதியவர் : மருதகாசி
இசை : கே.வி.மகாதேவன்
பாடியவர்கள் : எஸ்.சி.கிருஷ்ணன்,சுசீலா
இயக்கம் : டி. ஆர். ரகுநாத்


இயக்குனர்டி. ஆர். ரகுநாத்
தயாரிப்பாளர்டி. ஆர். சுந்தரம்
மோடேர்ன் தியேட்டர்ஸ்
நடிப்புபிரேம்நசீர்
டி. ஆர். ராமச்சந்திரன்
மனோகர்[1]
டி. பாலசுப்பிரமணியன்
டி. ஆர். நடராஜன்
பி. எஸ். சரோஜா[1]
மைனாவதி
முத்துலட்சுமி
எம். சரோஜா
சி. எல். சரஸ்வதி





பாடல் வரிகள் :

சுசீலா: சித்தாடை கட்டிக்கிட்டு
சிங்காரம் பண்ணிக்கிட்டு
மத்தாப்பு சுந்தரி ஒருத்தி
மயிலாக வந்தாளாம்
குழுவினர்: சித்தாடை கட்டிக்கிட்டு
சிங்காரம் பண்ணிக்கிட்டு
மத்தாப்பு சுந்தரி ஒருத்தி
மயிலாக வந்தாளாம்
சுசீலா: அத்தானைப் பாத்து
அசந்து போயி நின்னாளாம்
பெண் குழுவினர்: அத்தானைப் பாத்து
அசந்து போயி நின்னாளாம்

சுசீலா: ஆஆ
பெண் குழுவினர்: சித்தாடை கட்டிக்கிட்டு
சிங்காரம் பண்ணிக்கிட்டு
மத்தாப்பு சுந்தரி ஒருத்தி
மயிலாக வந்தாளாம்

கிருஷ்ணன்: முத்தாத அரும்பெடுத்து
மொழ நீள சரம் தொடுத்து
வித்தார கள்ளி கழுத்தில்
முத்தாரம் போட்டானாம்
ஆண் குழுவினர்: முத்தாத அரும்பெடுத்து
மொழ நீள சரம் தொடுத்து
வித்தார கள்ளி கழுத்தில்
முத்தாரம் போட்டானாம்
கிருஷ்ணன்: எத்தாகப் பேசி இள மனசைத் தொட்டானாம்
குழுவினர்: எத்தாகப் பேசி இள மனசைத் தொட்டானாம்

கிருஷ்ணன்: ஆ ..முத்தாத அரும்பெடுத்து
மொழ நீள சரம் தொடுத்து
வித்தார கள்ளி கழுத்தில்
முத்தாரம் போட்டானாம்

சுசீலா: குண்டூசி போல ரெண்டு கண்ணும் உள்ளவளாம்
முகம் கோணாமல் ஆசை அன்பாப் பேசும் நல்லவளாம்
கிருஷ்னன்: அஹா ஆஆஆஆ
சுசீலா: ஓஓஓஓஓஓஓஓஓஓ
சுசீலா: அந்தக் கண்டாங்கி சேலை காரி கைகாரியாம்
பெண் குழுவினர்: அந்தக் கண்டாங்கி சேலை காரி கைகாரியாம்
அந்தக் கள்ளி அத்தானைக் கல்யாணம் பண்ணிக் கொண்டாளாம்

சுசீலா: ஆஆ
பெண் குழுவினர்: சித்தாடை கட்டிக்கிட்டு
சிங்காரம் பண்ணிக்கிட்டு
மத்தாப்பு சுந்தரி ஒருத்தி
மயிலாக வந்தாளாம்

கிருஷ்ணன்: அஞ்சாத சிங்கம் போலே வீரம் உள்ளவனாம்
யானை வந்தாலும் பந்தாடி ஜெயிக்க வல்லவனாம்
சுசீலா: ஆஆஆஆ
கிருஷ்ணன்: ஆஆஆஆஆஆ
ஆண் குழுவினர்: அஞ்சாத சிங்கம் போலே வீரம் உள்ளவனாம்
யானை வந்தாலும் பந்தாடி ஜெயிக்க வல்லவனாம்
கிருஷ்ணன்: அந்த முண்டாசுக்கரன் கொஞ்சம் முன் கோபியாம்
ஆண் குழுவினர்: அந்த முண்டாசுக்கரன் கொஞ்சம் முன் கோபியாம்
ஆனாலும் பெண் ஏன்றால் அவன் அஞ்சிக் கெஞ்சி நிற்பானாம்

கிருஷ்ணன்: ஆ ..முத்தாத அரும்பெடுத்து
மொழ நீள சரம் தொடுத்து
வித்தார கள்ளி கழுத்தில்
முத்தாரம் போட்டானாம்

சுசீலா: முன்னூறு நாளை மட்டும் எண்ணிக் கொள்ளுங்க
கிருஷ்ணன்: அதன் பின்னாலே என்ன ஆகும் நீங்க சொல்லுங்க
பெண் குழுவினர்:ஆஆஆஆ
ஆண் குழுவினர்: ஆஆஆ
பெண் குழுவினர்: முன்னூறு நாளை மட்டும் எண்ணிக் கொள்ளுங்க
ஆண் குழுவினர்: அதன் பின்னாலே என்ன ஆகும் நீங்க சொல்லுங்க
சுசீலா: அந்த ரெண்டோடு ஒண்ணும் சேர்ந்து மூணாகுங்க
கிருஷ்ணன்: இந்த ரெண்டோடு ஒண்ணும் சேர்ந்து மூணாகுங்க
பெண் குழுவினர்: அதைக் கண்டு சந்தோஷம் கொண்டாடிப் பாடப் போறாங்க
ஆண் குழுவினர்: கண்டு சந்தோஷம் கொண்டாடிப் பாடப் போறாங்க

பெண் குழுவினர்: சித்தாடை கட்டிக்கிட்டு
ஆண் குழுவினர்: சிங்காரம் பண்ணிக்கிட்டு
பெண் குழுவினர்: மத்தாப்பு சுந்தரி ஒருத்தி
ஆண் குழுவினர்: மயிலாக வந்தாளாம்
பெண் குழுவினர்: முத்தாத அரும்பெடுத்து
ஆண் குழுவினர்: மொழ நீள சரம் தொடுத்து
பெண் குழுவினர்: வித்தார கள்ளி கழுத்தில்
ஆண் குழுவினர்: முத்தாரம் போட்டானாம்
பெண் குழுவினர்: மயிலாக வந்தாளாம்
ஆண் குழுவினர்: முத்தாரம் போட்டானாம்
பெண் குழுவினர்: மயிலாக வந்தாளாம்
ஆண் குழுவினர்: முத்தாரம் போட்டானாம்


ஆடியோ கேட்பதற்கு :::

 
 



No comments:

Post a Comment